வன்னி மயில் 2008 விருதிற்கான
நடனத்திறன் போட்டி பிரான்சின் பாரீசு பகுதியிலுள்ள மக்ஸ்தோர்மோ மண்டபத்தில்
27.12.2008 அன்றையதினம் மு.ப 11 மணியளவில் ஆரம்பமாகி மண்டபம் நிறைந்த
மக்களுடன் மிகச்சிறப்பாக இடம் பெற்றுள்ளது. பிரான்சு
தமிழ்பெண்கள்அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு முதன்முறையாக
இவ்வருடம் ஆரம்பமாகி நடாத்தப்பட்டு பெருவரவேற்பினைப்பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும். ஏழு குழுக்களாகப்பங்குகொண்ட நடனப்போட்டியாளர்கள்
தனிநடனம் குழுநடனம் எனப்போட்டிகளில் போட்டியாளர்கள் பங்குகொண்டுள்ளனர்.
புpரான்சில் நடனக்கலை பயிலும் மாணவர்களின் நலன்கருதி இப்போட்டி நிகழ்வு
ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படவுள்ளது. 185 இற்கும் அதிகமான
நடனப்போட்டியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான
பார்வையாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். நடுவர்களால்
சிறந்தபோட்டியாளர்களில் வெற்றிபெற்ற கலைஞர்களுக்கு பாராட்டுக்களும்
வெற்றிக்கேடையங்களும் வழங்கப்பட்டு இறுதியில் வன்னி மயில்
விருதுவழங்கப்பட்டது. |